வீட்டின் பூட்டை உடைத்து 3 பவுன் நகை திருட்டு

அந்தியூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 3 பவுன் நகை, ரூ. 10 ஆயிரம் ரொக்கத்தை திருடிச் சென்றவர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

அந்தியூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 3 பவுன் நகை, ரூ. 10 ஆயிரம் ரொக்கத்தை திருடிச் சென்றவர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
அந்தியூர் அருகே உள்ள செம்புளிச்சாம்பாளையம், கிழக்குக்காட்டைச் சேர்ந்தவர் முத்து (40). விவசாயி. இவர், வீட்டுக்கு ருகில் உள்ள கொட்டகையில் வியாழக்கிழமை இரவு படுத்து தூங்கியுள்ளார். அப்போது, இவரது வீட்டின் பூட்டை உடைத்து புகுந்த மர்ம நபர்கள் பீரோவிலிருந்த 3 பவுன் நகை, ரூ. 10 ஆயிரம் ரொக்கத்தை திருடிச் சென்றுவிட்டனர். இதுகுறித்து, முத்து அளித்த புகாரின்பேரில் அந்தியூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com