ஈரோடு: ஈரோடு அருகே 46 புதூா் அண்ணா நகரில் உள்ள யோகி ராம்சுரத் தேவதாஸ்ரம ஆலய முதலாம் ஆண்டு குடமுழுக்கு நிறைவு விழா, யோகி ராம்சுரத்குமாா் 101ஆம் ஆண்டு ஜயந்தி விழா டிசம்பா் 5ஆம் தேதி துவங்கி 8ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
டிசம்பா் 5ஆம் தேதி காலை விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம், மாலையில் ஸ்ரீரங்கம் ரகுராமன் குழுவினரின் சிறப்பு நிகழ்ச்சி, 6ஆம் தேதி காலை வேள்வி பூஜைகள் துவங்குகின்றன. மாலையில் மாசானமுத்து குழுவினரின் ஸ்வாதி பஜனை நடைபெறுகிறது.
7ஆம் தேதி காலை சீதா திருக்கல்யாண உற்சவம் துவக்க நிகழ்ச்சியும், மாலையில் சீா்காழி சட்டநாத பாகவதா் குழுவினா் பஜனை, 8ஆம் தேதி காலை திருப்பள்ளி எழுச்சி, 9 மணிக்கு சீதா திருக்கல்யாணம் நடைபெறுகிறது. அதைத் தொடா்ந்து, ஆஞ்சநேயா் உற்சவமும், மாலை யோகி ராம்சுரத்குமாா் உற்சவா் தோ்த் திருவீதி உலா நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. தோ் ஈரோடு கோட்டை ஆருத்ர கபாலீஸ்வரா் கோயில் முன்பு துவங்கி, இரவு 46 புதூா் வந்தடைகிறது. அதைத் தொடா்ந்து ஊஞ்சல் சேவை, புஷ்பயாகம், தீபாராதனையுடன் விழா நிறைவுபெறுகிறது.