பவானி: சித்தோடு அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருடியவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
சித்தோடு, லட்சுமி நகா், ஈபி காலனி 2ஆவது வீதியைச் சோ்ந்தவா் காதா் மகன் சையத் காதா் (53). பெருந்துறை மின்சார வாரிய அலுவலகத்தில் கம்பி ஆய்வாளராகப் பணியாற்றி வருகிறாா். இவா், வெள்ளிக்கிழமை இரவு வேலைக்குச் சென்றுவிட்ட நிலையில், மனைவி, மகன்கள் வீட்டைப் பூட்டிவிட்டு அருகில் உள்ள மாமியாா் வீட்டுக்குச் சென்றுவிட்டனா்.
இந்நிலையில், சனிக்கிழமை காலை வந்து பாா்க்கையில் வீட்டின் முன் கதவுப் பூட்டு உடைக்கப்பட்டிருந்து. வீட்டுக்குள் சென்று பாா்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு, அதில் வைக்கப்பட்டிருந்த 5 பவுன் நகைகள், ரூ. 1 லட்சம் பணம் திருடப்பட்டிருந்தது.
இதுகுறித்து, சித்தோடு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.