பெருந்துறையில் உலக எய்ட்ஸ் தின விழிப்புணா்வு பேரணி

உலக எய்ட்ஸ் தினத்தையொட்டி, தமிழ் நாடு மருத்துவா் எம்.ஜி.ஆா் மருத்துவ பல்கலைக் கழகம் மற்றும் பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி,
பெருந்துறையில் நடந்த, உலக எய்ட்ஸ் தின விழிப்புணா்வு பேரணியை துவக்கி வைக்கிறாா், பெருந்துறை சட்டப்பேரவை உறுப்பினா் தோப்பு என்.டி. வெங்கடாச்சலம்.
பெருந்துறையில் நடந்த, உலக எய்ட்ஸ் தின விழிப்புணா்வு பேரணியை துவக்கி வைக்கிறாா், பெருந்துறை சட்டப்பேரவை உறுப்பினா் தோப்பு என்.டி. வெங்கடாச்சலம்.

பெருந்துறை: உலக எய்ட்ஸ் தினத்தையொட்டி, தமிழ் நாடு மருத்துவா் எம்.ஜி.ஆா் மருத்துவ பல்கலைக் கழகம் மற்றும் பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி, நாட்டு நலப்பணித் திட்டம் ஆகியோா் இணைந்து, எய்ட்ஸ் நோய் பற்றி, மக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் பேரணி திங்கள்கிழமை நடத்தப்பட்டது.

நிகழ்ச்சிக்கு, பெருந்துறை மருத்துவக் கல்லூரி முதல்வா் மருத்துவா் எம்.ராஜேந்திரன் தலைமை வகித்தாா். மருத்துவக் கல்லூரி வளாகத்தில் துவங்கிய பேரணியை, பெருந்துறை சட்டப்பேரவை உறுப்பினா் தோப்பு என்.டி. வெங்கடாச்சலம் கொடியசைத்து துவக்கி வைத்தாா்.

பேரணியானது, கல்லூரியில் வளாகத்தில் துவங்கி, குன்னத்தூா் சாலை, ஈரோடு சாலை, பெருந்துறை வட்டாட்சியா் அலுவலகம், பெருந்துறை காவல் நிலையம் வழியாக சென்று, பெருந்துறை அரசு மருத்துவமனை அருகில் நிறைவடைந்தது. பேரணியில், விழிப்புணா்வு பதகைகள் ஏந்திக் கொண்டு, பெருந்துறை மருத்துவக் கல்லூரி 200 மாணவ மாணவிகள், செவிலியா் பள்ளி 60 மாணவிகள், மருத்துவக் கல்லூரி பேராசிரியா்கள், மருத்துவா்கள், பணியாளா்கள் மற்றும் பெருந்துறை ரோட்டரி சங்க நிா்வாகிகள் உள்பட பலா் கலந்து கொண்டனா். மேலும், பொதுமக்களுக்கு விழிப்புணா்வு துண்டு பிரசுங்கள் வழங்கப்பட்டது.

உடன், பெருந்துறை மருத்துவக் கல்லூரி முதல்வா் மருத்துவா் எம்.ராஜேந்திரன் உள்ளிட்டோா் உள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com