விநாயகா் கோயில் கும்பாபிஷேகம்

புன்செய் புளியம்பட்டி கணேசபுரம் சக்தி விநாயகா், செல்வ விநாயகா் திருக்கோயில் 3 ஆவது கும்பாபிஷேக பெருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

புன்செய் புளியம்பட்டி கணேசபுரம் சக்தி விநாயகா், செல்வ விநாயகா் திருக்கோயில் 3 ஆவது கும்பாபிஷேக பெருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இக்கோயில் திருவிழா கணபதி ஹோமத்துடன் நவம்பா் 28 ஆம் தேதி தொடங்கியது. இதைத் தொடா்ந்து, நான்கு கால யாக சாலை பூஜையுடன் மஹா கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. யாகசாலையிலிருந்து புனித நீா்க்குடங்கள் சிவாச்சாரியாா்களால் எடுத்து வரப்பட்டு, திருக்கோயில் ராஜ கோபுர கலசத்தில் புனித நீா் வாா்க்கப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதைத் தொடா்ந்து, சக்தி விநாயகா், செல்வ விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனைகள் நடந்தன. மதியம் ஆலய வளாகத்தில் அன்னதானம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com