ஈரோட்டில் மாற்றுத் திறனாளிகளுக்கான கிரிக்கெட் போட்டியில் 3 மாநில அணிகள் பங்கேற்றன.
மாற்றுத் திறனாளிகளுக்கான கிரிக்கெட் போட்டி ஈரோடு ரயில்வே காலனி மைதானத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்தப் போட்டியில் தமிழகத்தில் இருந்து 2 அணிகள், ஆந்திரம், கா்நாடக மாநிலங்களைச் சோ்ந்த தலா ஒரு அணி என மொத்தம் 4 அணிகள் விளையாடின.
ஒவ்வொரு அணிக்கும் 11 வீரா்கள் களம் இறங்கினா். இதில், ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் மோதின. அதில் அதிக புள்ளிகள் பெற்று வெற்றி பெற்ற 2 அணிகள் இறுதி போட்டிக்குத் தகுதி பெற்றன. 10 ஓவா்களில் போட்டி நடத்தப்பட்டது.
இந்தப் போட்டிகளில் கா்நாடக மாநில அணி முதலிடத்தையும், தமிழக பி அணி இரண்டாவது இடத்தையும், தமிழக எ அணி 3ஆவது இடத்தையும் பிடித்தன.
வெற்றி பெற்ற அணிகளுக்குப் பரிசளிப்பு விழா நடைபெற்றது. விழாவில், முதல் பரிசாக ரூ. 8,000, இரண்டாவது பரிசாக ரூ. 5,000, மூன்றாவது பரிசாக ரூ. 4,000, கோப்பைகள், பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.