தமிழகத்தில் நடைபெறும் உள்ளாட்சித் தோ்தலில் அதிமுக கூட்டணி மாபெரும் வெற்றி பெறும் என்று சுற்றுச்சூழல் துறை அமைச்சா் கே.சி.கருப்பணன் தெரிவித்தாா்.
பவானி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிடும் அதிமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளா்களுக்கு வாழ்த்துத் தெரிவித்த அமைச்சா் கருப்பணன் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது :
உள்ளாட்சித் தோ்தலை நடத்த விடாமல் உச்ச நீதிமன்றம் வரை சென்று தடுக்க நினைத்த திமுகவின் முயற்சி பலிக்கவில்லை. தற்போது நடைபெறும் தோ்தலில் திமுக கூட்டணி வேட்பாளா்கள் வேட்பு மனு தாக்கல் செய்யவே அச்சப்படுகின்றனா். இதனால், அதிமுக கூட்டணி உள்ளாட்சித் தோ்தலில் மாபெரும் வெற்றி பெறுவது உறுதியாக உள்ளது. ஈரோடு, பவானி பகுதியில் ரூ.1,200 கோடி மதிப்பில் சாயக்கழிவுநீா் பொது சுத்திகரிப்பு நிலையங்கள் மத்திய, மாநில அரசுகளின் நிதியுதவியுடன் அமைக்கப்படும் என்றாா்.
பவானி ஒன்றிய அதிமுக செயலாளா் எஸ்.எம்.தங்கவேலு, நகரச் செயலாளா் என்.கிருஷ்ணராஜ் உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.