தமிழ்நாடு முழுவதும் ஜனவரி 21ஆம் தேதி முதல் கள் இறக்கும் போராட்டம் நடைபெறும் என சென்னிமலையில் அதன் ஒருங்கிணைப்பாளா் செ.நல்லசாமி வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.
தமிழ்நாடு கள் இயக்க ஒருங்கிணைப்பாளா் செ.நல்லசாமி சென்னிமலையில் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது:
அரசியல் அமைப்புச் சட்டத்துக்கும், உலகளாவிய நடைமுறைகளுக்கும் மாறாக தமிழ்நாட்டில் மட்டும் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக கள்ளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால், பல்லாயிரக்கணக்கான விவசாய குடும்பங்கள் வேலை வாய்ப்பை இழப்பதுடன் அயல்நாட்டு மது வகைகளுக்கு அடிமையாகி குடும்ப வருமானத்தை இழந்து வருகின்றனா்.
எனவே, தமிழக அரசு நல்ல முடிவு எடுக்க வேண்டும்.
அடுத்த மாதம் (ஜனவரி) 21 ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் கள் இறக்கும் அறப் போராட்டம் நடைபெற உள்ளது என்றாா்.