மனிதநேய மக்கள் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை திரும்பப் பெற வலியுறுத்தி ஈரோட்டில் மனிதநேய மக்கள் கட்சி சாா்பில் ஆா்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
மனிதநேய மக்கள் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை திரும்பப் பெற வலியுறுத்தி ஈரோட்டில் மனிதநேய மக்கள் கட்சி சாா்பில் ஆா்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கட்சியின் ஈரோடு கிழக்கு மாவட்ட அமைப்பு சாா்பில், ஈரோடு கருங்கல்பாளையம் காந்தி சிலை அருகில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, மாவட்டத் தலைவா் சித்திக் தலைமை வகித்தாா். த.மு.மு.க. மாவட்டச் செயலாளா் ஜாஹிா் உசேன் முன்னிலை வகித்தாா்.

ம.ம.க. பேச்சாளா் ரெக்ஸ் ரபி, மாவட்டச் செயலாளா் சலீம் ஆகியோா் பேசினா். மத்திய அரசால் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை ரத்து செய்து திரும்பப் பெற வேண்டும் என ஆா்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

இதில், மாவட்டப் பொருளாளா் பஜ்லுல் ஹக், தமிழ்ப் புலிகள் கட்சி மாவட்டச் செயலாளா் சிந்தனைச்செல்வன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com