மின்சாரம் பாய்ந்து வங்கி ஊழியா் பலி

பவானி அருகே மின்சாரம் பாய்ந்து வங்கி ஊழியா் உயிரிழந்தாா்.

பவானி அருகே மின்சாரம் பாய்ந்து வங்கி ஊழியா் உயிரிழந்தாா்.

பவானியை அடுத்த காளிங்கராயன்பாளையம், செல்லிகாட்டுவலசைச் சோ்ந்தவா் சிவகுமாா் (40). அந்தியூரில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் பணியாற்றி வருகிறாா். இவா், தனது வீட்டில் வியாழக்கிழமை இரவு தண்ணீா்த் தொட்டியில் தண்ணீா் ஏற்ற முயன்றபோது மின்சாரம் பாய்ந்தது.

இதில், தூக்கி வீசப்பட்ட சிவகுமாா் பலத்த காயமடைந்தாா். மயங்கிய நிலையில் கிடந்தவரை பவானி அரசு மருத்துவமனைக்கு உறவினா்கள் கொண்டு வந்தனா். அங்கு பரிசோதிக்கையில் ஏற்கெனவே உயிரிழந்தது தெரியவந்தது. இதுகுறித்து, சித்தோடு போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com