பெருந்துறை அருகே இருசக்கர வாகனத்தில் சென்றவர் மீது தனியார் பேருந்து மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
பெருந்துறையை அடுத்த கொளப்பலூர், கள்ளுமடைபாளையத்தைச் சேர்ந்த காளியப்பன் மகன் பச்சியண்ணன் (50). இவர் தனது இருசக்கர வாகனத்தில் பெருந்துறை நோக்கி வியாழக்கிழமை பிற்பகலில் சென்று கொண்டிருந்தார். சுள்ளிபாளையம் அருகே சென்றபோது, பின்னால் வந்த தனியார் பயணிகள் பேருந்து மோதியதில், சம்பவ இடத்திலேயே பச்சியண்ணன் உயிரிழந்தார். இதுகுறித்து, பெருந்துறை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.