அந்தியூர் ஆதர்ஷ் வித்யாலயா மகளிர் கலை, அறிவியல் கல்லூரியில் பொங்கல் விழா சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.
விழாவுக்கு, ஐடியல், ஆதர்ஷ் வித்யாலயா கல்வி நிறுவனங்களின் நிறுவனர் கே.சிவலிங்கம் தலைமை வகித்தார். ஆதர்ஷ் கல்வி நிறுவனங்களின் செயலாளர் எஸ்.செல்வமணி முன்னிலை வகித்தார்.
கல்லூரி முதல்வர் வி.பிரபாகரன், பொங்கல் பண்டிகையின் முக்கியத்துவம், தமிழர்களின் பாரம்பரியம், கலை, கலாசாரம் குறித்து விளக்கிப் பேசினார்.
தொடர்ந்து, துறை வாரியாக மாணவியர் பொங்கல் வைத்து சூரியனை வழிபட்டனர். பாரம்பரிய நடனங்கள், உரி அடித்தல், கும்மி அடித்தல், நாட்டுப்புறப் பாடல்களைப் பாடுதல் என உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது. இதையடுத்து, அனைவருக்கும் சர்க்கரைப் பொங்கல் வழங்கப்பட்டது.