பவானி நகரில் ஏழை, எளிய மக்களுக்கு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அதிமுக சார்பில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.
பவானி, தேவபுரம், காமராஜர் நகர் பகுதியில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, நகரச் செயலாளர் என்.கிருஷ்ணராஜ் தலைமை வகித்தார். கூட்டுறவு சங்கத் தலைவர்கள் ஏ.சி.முத்துசாமி, பி.பி.மோகன், எஸ்.எஸ்.சித்தையன், கே.கே.விஸ்வநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன், பொதுமக்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பை வழங்கினார்.
இதில், பவானி நகர்மன்ற முன்னாள் துணைத் தலைவர் ஏ.ராஜேந்திரன், அதிமுக நிர்வாகிகள் பெரியசாமி, சீனிவாசன், தனசேகரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.