சிவகிரி, வள்ளிபுரம் கிராமம், கோயில் புதூரில் உள்ள வரதராஜப் பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள் சனிக்கிழமை நடைபெற்றன.
இக்கோயிலில் ஆண்டுதோறும் மார்கழி மாத இறுதி சனிக்கிழமை அன்று சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். அதேபோல, இந்த ஆண்டும் மார்கழி சனிக்கிழமையையொட்டி கலியுக வரதராஜப் பெருமாள், அனுமன், கருடாழ்வார்க்கு அலங்காரங்கள் செய்யப்பட்டு சிறப்பு அபிஷேகமும், ஆராதனை பூஜைகளும் நடைபெற்றன.
இப்பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொணடு சுவாமியை வழிபட்டனர். பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.