பெருந்துறை ஒன்றியம், சுள்ளிப்பாளையம் அரசு தொடக்கப் பள்ளியில் கற்றலில் புதுமை (ஸ்மார்ட் கிளாஸ்) வகுப்பறை திறப்பு விழா செவ்வாய்கிழமை நடைபெற்றது.
பள்ளியின் முன்னாள் மாணவர்கள் கூட்டமைப்பு பங்களிப்புடன் அமைக்கப்பட்ட இந்த வகுப்பறை திறப்பு விழாவுக்கு, பெருந்துறை வட்டாரக் கல்வி அலுவலர் த.வனிதாராணி தலைமை வகித்தார். பெற்றோர்- ஆசிரியர் கழகத் தலைவர் மோகன் முன்னிலை வகித்தார். தலைமையாசிரியர் ப.சத்தியரேகா வரவேற்றார்.
விழாவில், சிறப்பு அழைப்பாளராக பெருந்துறை சட்டப் பேரவை உறுப்பினர் தோப்பு என்.டி.வெங்கடாச்சலம் பங்கேற்று ஸ்மார்ட் கிளாஸ் வகுப்பறையைத் திறந்து வைத்து பேசினார்.
இதில், பெருந்துறை கூட்டுறவு விற்பனைச் சங்கத் தலைவர் விஜயன், துணைத் தலைவர் டி.டி.ஜெகதீஸ், வி.பி.சண்முகம் உள்பட பலர் கலந்து கொண்டனர். பள்ளியின் முன்னாள் மாணவ, மாணவிகள் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் சு.சி.விஜயன் நன்றி கூறினார்.