ஈரோட்டில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆயுள் காப்பீட்டுக் கழக முகவர்கள் ஆர்ப்பாட்டத்தில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனர்.
ஈரோடு - பவானி சாலையில் உள்ள காப்பீட்டுக் கழக அலுவலகம் அருகில் சங்க மாவட்டத் தலைவர் ரவிசந்திரன் தலைமையில், செயலாளர் வடிவேல், பொருளாளர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், ஆயுள் காப்பீட்டுக் கழக பாலிசிதாரர்களுக்கான போனஸ் தொகையை அதிகரிக்க வேண்டும்.
ஆயுள் காப்பீடு பாலிசிக்கு ஜி.எஸ்.டி. வரியிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும். முகவர் நல நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். கடன், இதர பணப் பரிவர்த்தனைக்கான வட்டியைக் குறைக்க வேண்டும் என்பன உள்ளிட்டகோரிக்கைகளை வலியுறுத்தி முகவர்கள் முழக்கமிட்டனர். இதில், திரளான முகவர்கள் பங்கேற்றனர்.