கொடுமுடி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற ஏலத்தில் ரூ. 7 லட்சத்து 18 ஆயிரத்து 140 க்கு வேளாண் விளைபொருள்கள் விற்பனையாயின.
கொடுமுடி சுற்று வட்டாரப் பகுதிகளிலிருந்து விவசாயிகள் 4,967 தேங்காய்களை விற்பனைக்குக் கொண்டு வந்தனர். இதில், தேங்காய் கிலோ அதிகபட்சமாக ரூ. 39.45 க்கும், குறைந்தபட்சமாக ரூ. 31.75 க்கும் ஏலம் போயின.
அதேபோல, 156 மூட்டைகளில் கொண்டு வந்த தேங்காய் கொப்பரை ரூ. 6,74,390 க்கு விற்பனையானது. இதில், முதல் தரம் அதிகபட்சமாக ரூ. 123.10 க்கும், குறைந்தபட்சமாக ரூ. 116.70 க்கும், இரண்டாம் தரம் அதிகபட்சமாக ரூ. 116.35 க்கும், குறைந்தபட்சமாக ரூ. 75.35 க்கும் விற்பனையாயின. மொத்தம், ரூ. 7 லட்சத்து 18 ஆயிரத்து 140 க்கு வேளாண் விளைபொருள்கள் விற்பனையாயின.