சத்தியமங்கலம் நகராட்சியில் மழைநீர் சேகரிப்பு அமைப்பை ஏற்படுத்துவது அவசியம் என நகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.
இது குறித்து சத்தியமங்கலம் நகராட்சி சார்பில் வெளியிட்ட அறிக்கை: பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைவாக இருப்பதால் பவானிஆற்றில் விநியோகிக்கும் நீரை மக்கள் சிக்கனமாக பயன்படுத்த வேண்டும். தற்போது நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த தமிழக அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைக்கு ஆதரவாக நகராட்சி குடியிருப்புகளில் ஒவ்வொருவரும் மழைநீர் சேகரிப்புத் தொட்டியை அமைத்து பராமரிக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.