அந்தியூரில் நாட்டுத் துப்பாக்கிகள் வைத்திருந்த இருவர் கைது

அந்தியூர் அருகே நாட்டுத் துப்பாக்கிகள் வைத்திருந்ததாக இருவரை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர். 

அந்தியூர் அருகே நாட்டுத் துப்பாக்கிகள் வைத்திருந்ததாக இருவரை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர். 
அந்தியூரை அடுத்த பெருமாபாளையம் பகுதியில் போலீஸார் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தபோது சந்தேகப்படும்படி சென்ற அதே பகுதியைச் சேர்ந்த சேட்டு (42) என்பவரிடம் விசாரித்தனர். அப்போது, அவர் உரிமம் இல்லாமல் நாட்டுத் துப்பாக்கியை பதுக்கிவைத்திருந்தது தெரியவந்தது.
இதையடுத்து துப்பாக்கியைப் பறிமுதல் செய்த போலீஸார், சேட்டுவைக் கைது செய்தனர். இதேபோல, அத்தாணி காலனியைச் சேர்ந்த சக்திவேல் (33) என்பவரிடம் நாட்டுத் துப்பாக்கி உள்ளதாக கிடைத்த தகவலின்பேரில் போலீஸார் அவரைப் பிடித்து விசாரித்தனர்.
அப்போது, அவர் மறைத்து வைத்திருந்த நாட்டுத் துப்பாக்கியைப் பறிமுதல் செய்த போலீஸார் அவரைக் கைது செய்தனர். 
இது குறித்து அந்தியூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.  அந்தியூரில் இதுவரையில் 16 நாட்டுத் துப்பாக்கிகளை பறிமுதல் செய்த போலீஸார் 13 பேரைக் கைது செய்துள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com