சென்னிமலையை அடுத்த உலகபுரம், செம்போடு பியூச்சரிஸ்டிக் பள்ளி சார்பில் மழைநீர் சேகரிப்பு குறித்த விழிப்புணர்வுப் பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
சென்னிமலை, குமரன் சதுக்கம் அருகில் துவங்கிய பேரணிக்கு பள்ளியின் நிர்வாக அதிகாரி கே.ரங்கநாதன் தலைமை வகித்தார். பள்ளி முதல்வர் வீணா எஸ்.குல்கர்னி முன்னிலை வகித்தார். சென்னிமலை வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேந்திரன் பேரணியை கொடியசைத்து துவக்கிவைத்தார்.
இதில், மழைநீர் சேகரிப்பின் அவசியம் குறித்து மாணவ, மாணவிகள் கோஷங்கள் எழுப்பியபடி முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்ற பேரணி சென்னிமலை பேருந்து நிலையம் அருகே நிறைவடைந்தது.