சென்னிமலை ஒன்றியம், பாலதொழுவு ஊராட்சியில் அம்மா திட்ட முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
முகாமுக்கு, பெருந்துறை வட்டாட்சியர் துரைசாமி தலைமை வகித்தார். முகாமில், முதியோர் உதவித்தொகை, இலவச வீட்டுமனைப் பட்டா, குடும்ப அட்டைகள் உள்ளிட்டவை கேட்டு 12 மனுக்கள் பெறப்பட்டன. தகுதியுள்ள மனுக்கள் மீது உடனே தீர்வு காணப்பட்டது.
முகாமில், அனைத்து துறை அலுவலர்களும் கலந்து கொண்டனர். முகாமிற்கான ஏற்பாடுகளை வருவாய்த் துறையினர் செய்திருந்தனர்.