காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை கவிழ்க்கும் முயற்சியில் பாஜக ஈடுபடுவதாகக் கூறி, அக்கட்சியைக் கண்டித்து ஈரோட்டில்


கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை கவிழ்க்கும் முயற்சியில் பாஜக ஈடுபடுவதாகக் கூறி, அக்கட்சியைக் கண்டித்து ஈரோட்டில் காங்கிரஸ் கட்சியினர் சனிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஈரோடு காளைமாட்டு சிலை அருகில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் மாநகர் மாவட்ட முன்னாள் தலைவர் ஈ.ஆர்.ராஜேந்திரன் தலைமை வகித்தார். மண்டல தலைவர்கள் ஜாபர்சாதிக், திருச்செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 
கர்நாடகத்தில் ஆட்சி மாற்றத்தை கொண்டு வர முயற்சிக்கும் பாஜகவை கண்டிப்பது, சர்வாதிகார போக்கை கைவிட்டு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுக்கு மதிப்பளிக்க வேண்டும், எம்எல்ஏக்களிடம் பேரம் பேசும் நடவடிக்கையை கைவிட வேண்டும் என்பன 
உள்ளிட்ட முழக்கங்களை எழுப்பினர்.
இதில் கட்சியின் மகளிர் அணி மாநில துணைத் தலைவர் சித்ரா விஸ்வநாதன், மாவட்ட தலைவர் புவனேஸ்வரி,  கட்சியின் மாவட்ட செயலாளர் முகமது அர்சத் உள்ளிட்டோர் 
பங்கேற்றனர்.
இதேபோல ஈரோடு தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் மூலப்பாளையத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவர்   மக்கள் ஜி.ராஜன் தலைமை வகித்தார். தமிழக காங்கிரஸ் கட்சியின் ஒழுங்கு நடவடிக்கைக்குழு உறுப்பினர் ஆர்.எம்.பழனிசாமி பேசினார். இதில் வட்டார தலைவர்கள் முத்துக்குமார், கோபாலகிருஷ்ணன், இளைஞர் காங்கிரஸ் தலைவர்கள் தளபதி ரமேஷ், விஜய், பிரபு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com