கோபி கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆங்கிலத் துறை மற்றும் செல்வம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆங்கிலத் துறை இணைந்து புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளன.
இந்த ஒப்பந்தம் ஜூலை மாதம் முதல் அமலுக்கு வருகிறது. இந்த ஒப்பந்தத்தினால் இந்த இரு கல்லூரிகளும் இணைந்து தரம் வாய்ந்த பாடநூல்களைத் தயாரித்தல், கருத்தரங்கம், பயிற்சிப் பட்டறை போன்றவற்றை நடத்த முடியும். இரு கல்லூரி மாணவர்களும் பல போட்டித் தேர்வுகளுக்குத் தங்களைத் தயார் படுத்திக்கொள்ள முடியும்.
இரு கல்லூரி நிர்வாகத்தினர் ஒப்பந்தத்தில் கையொப்பம் இட்டதை கல்லூரி தாளாளர் எம்.தரணீதரன், முதல்வர் வீ.தியாகராசன், கல்லூரி டீன் ஆர்.செல்லப்பன் மற்றும் பேராசிரியர்கள் பாராட்டினர்.