மொடக்குறிச்சி, கொடுமுடி சுற்றுவட்டாரப் பகுதிகளில் திங்கள்கிழமை காலை முதல் இரவு வரை சாரல் மழை பெய்தது.
தமிழகத்தில் கடும் வறட்சியால் குளம், குட்டைகள், ஏரிகள் காய்ந்து குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து தமிழக அரசு மழைநீர் சேகரிக்கவும், நீர்நிலைகளை மேம்படுத்தவும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது.
இந்நிலையில் மொடக்குறிச்சி, கொடுமுடி சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஞாயிற்றுகிழமை இரவு 11மணி முதல் 12 மணிவரை லேசான மழை ஆங்காங்கே பெய்தது.
தொடர்ந்து மொடக்குறிச்சி, கொடுமுடி, சிவகிரி, அரச்சலூர், அவல்பூந்துறை, கணபதிபாளையம் உள்ளிட்ட சுற்று வட்டாரப் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் இருந்தது. திங்கள்கிழமை மதியம் பெய்யத் தொடங்கிய மழை மாலையில் சாரலானது. இந்த மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.