முகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் ஈரோடு
சாலை விபத்தில் இளைஞர் சாவு
By DIN | Published On : 30th July 2019 09:13 AM | Last Updated : 30th July 2019 09:13 AM | அ+அ அ- |

சென்னிமலை அருகே இருசக்கர வாகனத்தின் மீது பொக்லைன் வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே இளைஞர் உயிரிழந்தார்.
சென்னிமலை, மேலப்பாளையம், சரவணா நகரைச் சேர்ந்தவர் வெள்ளியங்கிரி (53). சலவை தொழிலாளி. இவரது மகன் செந்தில்குமார் (20). இவர், தனது தந்தைக்கு உதவியாக வேலை செய்து வந்தார்.
இந்த நிலையில், வெள்ளோட்டில் இருந்து சென்னிமலையை நோக்கி இருசக்கர வாகனத்தில் ஞாயிற்றுக்கிழமை செந்தில்குமார் சென்று கொண்டிருந்தார்.
அப்போது, சென்னிமலை, குமராபுரி அருகே வரும்போது எதிரே வந்த பொக்லைன் வாகனம் இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த செந்தில்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து சென்னிமலை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.