ஆதிதிராவிடர் நலத் துறை விடுதிகளில் சேர பள்ளி, கல்லூரி மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்

ஈரோடு மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை பள்ளி, கல்லூரி விடுதிகளில் தங்கி பயில

ஈரோடு மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை பள்ளி, கல்லூரி விடுதிகளில் தங்கி பயில மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: 
ஈரோடு மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறையின் கீழ் 25 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலப் பள்ளிகளும், 31 பள்ளி விடுதிகளும், 2 கல்லூரி விடுதிகளும் செயல்பட்டு வருகின்றன. நடப்பு கல்வியாண்டில் பயிலும் மாணவ, மாணவிகள் தாங்கள் பயிலும் பள்ளி, கல்லூரிக்கு அருகில் உள்ள விடுதிகளில் தங்கி படிக்க விருப்பமுள்ளவர்கள் விடுதியில் சேர்வதற்கான விண்ணப்பங்களை அந்தந்த விடுதி காப்பாளரிடம் பெற்றுக் கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் அவர்கள் பயிலும் கல்வி நிறுவனங்கள் மூலம் அளிக்கப்பட வேண்டும். 
விடுதியில் சேர்க்கப்படும் மாணவ, மாணவியர் பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.2.50 லட்சத்துக்கு மிகாமல் இருப்பதை கட்டாயம் உறுதி செய்துகொள்ள வேண்டும். விண்ணப்பப் படிவத்தில் மாணவ, மாணவியரின் புகைப்படம்  ஒட்டப்பட்டு அதில் அவர்கள் பயிலும் கல்வி நிறுவனங்களின் சான்றொப்பம் பெற்றிருக்க வேண்டும். 
விடுதியில் தங்கிப் பயிலும் மாணவ, மாணவிகள் கட்டாயம் வங்கிக் கணக்கு துவங்கி இருக்க வேண்டும். விண்ணப்பப் படிவத்தில் ஆதார் அட்டை எண்ணை கட்டாயம் குறிப்பிட்டிருக்க வேண்டும். பள்ளி விடுதியில் சேர விரும்பும் மாணவ, மாணவியர் வெள்ளிக்கிழமை (ஜூன் 14) மாலைக்குள்ளும், கல்லூரி விடுதியில் சேர விரும்பும் மாணவ, மாணவியர் ஜூலை 1ஆம் தேதிக்குள்ளும் விண்ணப்பம் அளிக்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com