கொடிவேரி குடிநீர்த் திட்டத்தை நிறைவேற்றியே தீருவோம்: எம்எல்ஏ தோப்பு வெங்கடாச்சலம் உறுதி

புதிய கொடிவேரி கூட்டுக்குடிநீர்த் திட்டத்தை நிறைவேற்றியே தீருவோம் என பெருந்துறை எம்எல்ஏ தோப்பு என்.டி.வெங்கடாச்சலம் பேசினார். 

புதிய கொடிவேரி கூட்டுக்குடிநீர்த் திட்டத்தை நிறைவேற்றியே தீருவோம் என பெருந்துறை எம்எல்ஏ தோப்பு என்.டி.வெங்கடாச்சலம் பேசினார். 
பெருந்துறை ஒன்றியத்துக்கு உள்பட்ட பகுதிகளில் பொதுமக்களின் குடிநீர்த் தேவையை பூர்த்தி செய்வது குறித்த ஆலோசனைக் கூட்டம், பெருந்துறை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்துக்கு தலைமை வகித்து தோப்பு என்.டி.வெங்கடாச்சலம் பேசியதாவது: 
பெருந்துறை தொகுதி பொதுமக்களுக்கு எந்த காலத்திலும் தட்டுப்பாடின்றி சுகாதாரமான குடிநீர் வழங்க வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் புதிய கொடிவேரி கூட்டுக் குடிநீர்த் திட்டத்தை அறிவித்தார்.
 அந்த திட்டத்துக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி நிதி ஒதுக்கீடு செய்தார். திட்டப் பணிகள் நல்ல முறையில் விரைவாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சில அமைப்பினர் இத்திட்டத்தை முடக்கப் பார்க்கின்றனர். யார் தடுத்தாலும் இந்தத் திட்டத்தை நிறைவேற்றியே தீருவோம் என்றார்.
இக்கூட்டத்தில் பெருந்துறை ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் செந்தில்குமார், சுப்பிரமணியம், பொறியாளர் பிரகாஷ், பேரூராட்சி செயல் அலுவலர்கள் கணேசன், கருமாண்டிசெல்லிபாளையம் பேரூராட்சி செயல் அலுவலர் அசோக்குமார், ஒன்றிய அதிமுக செயலாளர் விஜயன், அவைத் தலைவர் சந்திரசேகரன், நகர செயலாளர் கே.எம்.பழனிச்சாமி  உள்பட பலர் கலந்துகொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com