ஈரோடு பிஎஸ்என்எல் தொலைத்தொடர்பு மாவட்டத்தில் சிம் கார்டு சிறப்பு விற்பனை முகாம் (மெகா மேளா) வியாழக்கிழமை (ஜூன்20) நடைபெறவுள்ளது.
பொதுமக்கள் புதிய 4ஜி சிம்கார்டுகளை தங்கள் தேவைக்கேற்ற பிளான்களில் நேசம் கோல்டு, மினிட்-செகண்ட் பிளானில் பிஎஸ்என்எல் இணைப்பில் இணையலாம்.
பிற நிறுவன இணைப்புகளில் இருந்து எண்ணை மாற்றாமல், எம்என்பி மூலம் பிஎஸ்என்எல் நிறுவன இணைப்புக்கு மாறலாம். இத்தகவல், ஈரோடு பிஎஸ்என்எல் தொலைத்தொடர்பு மாவட்ட பொதுமேலாளர் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.