சென்னிமலை சாலையில் நாளை முதல் 3 நாள்களுக்கு குடிநீர் விநியோகம் ரத்து

ஊராட்சிக்கோட்டை குடிநீர்த் திட்ட பிரதான குழாய் அமைக்கும் பணி நடைபெறவுள்ளதால் சென்னிமலை சாலையில் உள்ள

ஊராட்சிக்கோட்டை குடிநீர்த் திட்ட பிரதான குழாய் அமைக்கும் பணி நடைபெறவுள்ளதால் சென்னிமலை சாலையில் உள்ள பகுதிகளுக்கு வரும் ஜூன் 25 ஆம் தேதி முதல் 27 ஆம் தேதி வரை 3 நாள்களுக்கு குடிநீர் விநியோகம் ரத்து செய்யப்படுவதாக மாநகராட்சி அறிவித்துள்ளது. 
 ஈரோடு மாநகராட்சி மண்டலம் 3 மற்றும் 4-க்குள்பட்ட சென்னிமலை சாலை குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிக்கு ஊராட்சிக்கோட்டையில் இருந்து தண்ணீர் கொண்டு வரும் தனிக் குடிநீர் திட்டப் பணிகளுக்கான பிரதானக் குழாய் அமைக்கும் பணிகள் நடைபெறவுள்ளது.
 இப்பணியின் காரணமாக மாநகராட்சி மண்டலம் 3-க்குள்பட்ட வார்டு எண்கள் 41, 44,45 மற்றும் முத்தம்பாளையம் வீட்டுவசதி வாரியப் பகுதிகளான வார்டு எண்கள் 34,37, மேலும் மண்டலம் 4-க்குள்பட்ட வார்டு எண்கள் 46,48,51,52 ஆகிய வார்டு பகுதிகளுக்கு வரும் ஜூன் 25ஆம் தேதி முதல் 27ஆம் தேதி வரை 3 நாள்களுக்கு குடிநீர் விநியோகம் ரத்து செய்யப்படுகிறது. 
 மாநகராட்சி ஆணையர் எம்.இளங்கோவன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com