பவானி அருகே தீக் காயமடைந்த மூதாட்டி உயிரிழப்பு

பவானி அருகே ஒலகடத்தில் தீக் காயமடைந்த மூதாட்டி சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார். 

பவானி அருகே ஒலகடத்தில் தீக் காயமடைந்த மூதாட்டி சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார். 
பவானியை அடுத்த ஒலகடம், குழந்தைபாளையத்தைச் சேர்ந்தவர் லட்சுமி (70).  இவர் கடந்த 17 ஆம் தேதி இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது, மண்ணெண்ணெய் விளக்கு கவிழ்ந்ததில் எதிர்பாராமல் படுக்கையில் தீப் பிடித்துள்ளது.
இதில், பலத்த தீக் காயமடைந்த லட்சுமியை உறவினர்கள் மீட்டு பவானி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கிருந்து உயர் சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனையில் லட்சுமி சேர்க்கப்பட்டார்.
ஆனால், சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார். 
இது குறித்து புகாரின் பேரில்  வெள்ளிதிருப்பூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com