வீட்டின் கதவை உடைத்து நகை, பணம் திருட்டு

கொடுமுடி அருகே பூட்டிய வீட்டின் கதவை உடைத்து 12 பவுன் நகை மற்றும் ரூ.25 ஆயிரத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர். 

கொடுமுடி அருகே பூட்டிய வீட்டின் கதவை உடைத்து 12 பவுன் நகை மற்றும் ரூ.25 ஆயிரத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர். 
ஈரோடு- கரூர் சாலையில் தெற்கு புதுப்பாளையத்தைச் சேர்ந்தவர்கள் பெரியசாமி (61), அவரது மனைவி செல்லாத்தாள் (51). இவர்கள் தாமரைப்பாளையத்தில் மளிகைக் கடை நடத்தி வருகின்றனர். 
இந்நிலையில், வழக்கம்போல் இருவரும் திங்கள்கிழமை மளிகைக் கடைக்கு சென்று விட்டனர். பின்னர், வீடு திரும்பியபோது வீட்டின் முன்பக்க கதவு உடைந்திருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
வீட்டிற்குள் சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 12 பவுன் நகை, ரொக்கம் ரூ.25 ஆயிரம் ஆகியவை திருடப்பட்டு இருந்தது தெரியவந்தது. இது குறித்து பெரியசாமி அளித்த புகாரின் பேரில் கொடுமுடி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com