திருவாச்சியில் ரூ.15.40 கோடியில் திட்டப் பணிகளுக்கு பூமிபூஜை

பெருந்துறை ஒன்றியத்தில் ரூ.15.40 கோடி மதிப்பீட்டில் திட்டப் பணிகளுக்கான பூமிபூஜை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

பெருந்துறை ஒன்றியத்தில் ரூ.15.40 கோடி மதிப்பீட்டில் திட்டப் பணிகளுக்கான பூமிபூஜை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
திங்களுர் வாரச் சந்தையை ரூ.40 லட்சம் மதிப்பீட்டில் மேம்பாடு செய்யவும், திருவாச்சி ஊராட்சிப் பகுதியில் வீடு இல்லாத ஏழைக் குடும்பத்தினருக்கு ரூ.15 கோடி மதிப்பீட்டில் 204 வீடுகள் கொண்ட அடுக்குமாடிக் குடியிருப்பு கட்டுவதற்கும் பூமி பூஜை நடைபெற்றது. 
விழாவில், பெருந்துறை சட்டப் பேரவை உறுப்பினர் தோப்பு என்.டி.வெங்கடாச்சலம் பங்கேற்று பூமி பூஜை செய்து திட்டப் பணிகளை துவக்கி வைத்தார். 
இந்நிகழ்ச்சியில், பெருந்துறை ஒன்றிய அதிமுக செயலாளர் விஜயன், பெருந்துறை ஒன்றியக் குழு முன்னாள் தலைவர் எஸ்.பெரியசாமி, பெருந்துறை வேளாண் கூட்டுறவு விற்பனை சங்கத் துணைத் தலைவர் டி.டி.ஜெகதீஷ், திருவாச்சி ஊராட்சி செயலாளர் எல்.சக்திவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com