தேர்தல் கலந்தாய்வுக் கூட்டம்

அந்தியூரில் மக்களவைத் தேர்தல் ஏற்பாடுகள் குறித்த கலந்தாய்வுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. 


அந்தியூரில் மக்களவைத் தேர்தல் ஏற்பாடுகள் குறித்த கலந்தாய்வுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. 
அந்தியூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு, திருப்பூர் மக்களவை தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் பழனிசாமி தலைமை வகித்தார். கூட்டத்தில், திருப்பூர் மக்களவை தொகுதிக்கு உள்பட்ட அந்தியூர் சட்டப் பேரவைத் தொகுதியில் வாக்குச் சாவடிகள் எண்ணிக்கை, வாக்காளர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள், மின்சார வசதி குறித்து விவாதிக்கப்பட்டது. 
மேலும் தீர்க்க முடியாத பிரச்னைகள் குறித்து மாவட்ட நிர்வாகத்துக்குத் தெரியப்படுத்தி உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது. 
கூட்டத்தில், பவானி காவல் துணை கண்காணிப்பாளர் டி.சார்லஸ், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பேரூராட்சி செயல் அலுவலர்கள் உள்பட 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com