விபத்தில் தொழிலாளி சாவு

அந்தியூர் அருகே சாலை விபத்தில் விவசாயக் கூலித் தொழிலாளி உயிரிழந்தது குறித்து  போலீஸார் விசாரித்து வருகின்றனர். 


அந்தியூர் அருகே சாலை விபத்தில் விவசாயக் கூலித் தொழிலாளி உயிரிழந்தது குறித்து  போலீஸார் விசாரித்து வருகின்றனர். 
வெள்ளித்திருப்பூர், மறவன்குட்டை யைச் சேர்ந்தவர் பழனிசாமி (55). விவசாய கூலித் தொழிலாளியான இவர் அந்தியூர் - அம்மாபேட்டை சாலையில் பட்லூர் நான்குமுனைச் சாலை அருகே சனிக்கிழமை தனது மொபட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது, அவ்வழியே சென்ற கார், மொபட் மீது மோதியதில் பழனிசாமி படுகாயம் அடைந்தார். 
அந்தியூர் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்குப் பின்னர், மேல்சிகிச்சைக்காக ஈரோடு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். இதுகுறித்து, வெள்ளிதிருப்பூர் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com