தேர்தல் பாதுகாப்புப் பணி:முன்னாள் படை வீரர்களுக்கு அழைப்பு

தேர்தல் பாதுகாப்புப் பணிக்கு முன்னாள் படை வீரர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.


தேர்தல் பாதுகாப்புப் பணிக்கு முன்னாள் படை வீரர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மக்களவைத் தேர்தல் வாக்குப் பதிவு நடைபெறும்போது தேர்தல் பாதுகாப்புப் பணியில் முன்னாள் படைவீரர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். எனவே, ஆரோக்கியமாக உள்ள அனைத்து முன்னாள் படை வீரர்களும் தவறாமல் தங்களது விருப்பத்தினை, ஈரோடு, காந்திஜி சாலையில் உள்ள ஜவான்ஸ் பவன், மாவட்ட முன்னாள் படைவீரர் நல துணை இயக்குநர் அலுவலகத்தில் வாரத்தின் அனைத்து நாள்களிலும் நேரில் ஆஜராகி தங்களது பெயரை உரிய படிவத்தில் பூர்த்தி செய்து பதிவு செய்து கொள்ளலாம்.
பெயர் பதிவு செய்ய வரும்போது அசல் படைவிலகல் சான்று, முன்னாள் படைவீரர் அடையாள அட்டை, ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றை எடுத்துவர வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com