பெருந்துறையில் மண்டல தேர்தல் அலுவலர்களுக்குப் பயிற்சி

திருப்பூர் மக்களவைத் தொகுதிக்கு உள்பட்ட பெருந்துறை  சட்டப்பேரவைத் தொகுதி மண்டல தேர்தல் அலுவலர்களுக்கான பயிற்சி முகாம் சனிக்கிழமை


திருப்பூர் மக்களவைத் தொகுதிக்கு உள்பட்ட பெருந்துறை  சட்டப்பேரவைத் தொகுதி மண்டல தேர்தல் அலுவலர்களுக்கான பயிற்சி முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.
திருப்பூர் மக்களவைத் தேர்தல் நடத்தும் அதிகாரியும், திருப்பூர் மாவட்ட ஆட்சியருமான கே.எஸ்.பழனிசாமி பங்கேற்று பயிற்சி முகாமை துவக்கி வைத்து, மண்டல தேர்தல் அலுவலர்களுக்கான பணிகள் குறித்து விளக்கிப் பேசினார். 
 இதில், திருப்பூர் மாவட்ட வருவாய் அலுவலரும், உதவி தேர்தல் நடத்தும் அதிகாரியுமான சுகுமார், ஈரோடு மாவட்ட வழங்கல் அலுவலரும், உதவி தேர்தல் நடத்தும் அதிகாரியுமான சி.ஜெயராமன், திருப்பூர் ஆட்சியர் நேர்முக உதவியாளர் கீதாபிரியா, பெருந்துறை வட்டாட்சியர் துரைசாமி, காவல் துணைக் கண்காணிப்பாளர்கள் ராஜாகுமார் (பெருந்துறை) செல்வம் (காங்கயம்), பெருந்துறை துணை வட்டாட்சியர் பரமசிவம் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com