இன்று பிஎஸ்என்எல் சிம் கார்டு சிறப்பு விற்பனை முகாம்
By DIN | Published On : 28th March 2019 09:29 AM | Last Updated : 28th March 2019 09:29 AM | அ+அ அ- |

பிஎஸ்என்எல் ஈரோடு தொலைத்தொடர்பு மாவட்டத்தில் சிம் கார்டு சிறப்பு விற்பனை முகாம் வியாழக்கிழமை நடைபெறவுள்ளது.
பொதுமக்கள் புதிய 4ஜி சிம் கார்டுகளை தங்கள் தேவைக்கேற்ற பிளான்களில், நேசம் கோல்டு, மினிட், செகன்ட் போன்ற பிளான்களில் பிஎஸ்என்எல் இணைப்பில் இணையலாம். பிற நிறுவனங்களில் இருந்து எண்ணை மாற்றாமல் எம்என்பி மூலம் பிஎஸ்என்எல் இணைப்புக்கு மாறலாம்.
பிஎஸ்என்எல் ஈரோடு தொலைத்தொடர்பு மாவட்ட பொதுமேலாளர் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...