ஈரோடு இடையன் காட்டுவலசு இந்து கல்வி நிலையம் கவிதாலயம் இசைப் பயிற்சிப் பள்ளியில் கோடைக்கால இலவச பயிற்சி முகாம் தொடக்கவிழா அண்மையில் நடைபெற்றது.
இதில் பரத நாட்டிய கலைஞர்கள் டி.மஞ்சுளா. எஸ்.பவித்ரா ஆகியோர் பயிற்சி முகாமை தொடங்கி வைத்தனர். கீர்த்தனா, மானஸா, லத்திகா, மோனிகா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
மே 1ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை தினமும் காலை 10 மணி முதல் 12 மணி வரை ஓவியம், கையெழுத்துப் பயிற்சி, அபாகஸ் பயிற்சி, மியூசிக்கல் கீபோர்டு, ஸ்போக்கன் இங்கிலீஷ், பரத நாட்டியம், வெஸ்ட்டர்ன் டான்ஸ் ஆகிய பயிற்கள் அளிக்கப்படுகின்றன.
மாணவ, மாணவிகள் அனைவரும் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளலாம் என கவிதாலயம் ராமலிங்கம் கேட்டுக்கொண்டுள்ளார்.