சென்னிமலை முருகன் கோயிலில் மே 12இல் சப்த நதி தீர்த்த அபிஷேகம்

சென்னிமலை முருகன் கோயிலில் 36 ஆவது ஆண்டு அக்னி நட்சத்திர விழா மே 9 ஆம் தேதி தொடங்குகிறது. இதைத் தொடர்ந்து, 12 ஆம்


சென்னிமலை முருகன் கோயிலில் 36 ஆவது ஆண்டு அக்னி நட்சத்திர விழா மே 9 ஆம் தேதி தொடங்குகிறது. இதைத் தொடர்ந்து, 12 ஆம் சுப்பிரமணிய சுவாமி மூலவர் மற்றும் உற்சவருக்கு சப்த நதி தீர்த்த அபிஷேகம் மற்றும் முக்கடல் தீர்த்த அபிஷேகம் நடைபெறுகிறது.
உலக நன்மைக்காகவும், மழை வேண்டியும், நாடு செழிக்கவும், அக்னி நட்சத்திர அன்னதான வழிபாட்டு மன்றம் சார்பில் சென்னிமலை முருகன் கோயிலில் ஆண்டு தோறும் சிறப்பு வழிபாடு நடத்துவது வழக்கம். அதன்படி 36 ஆவது ஆண்டு விழா மே 9 ஆம் தேதி சென்னிமலை அடிவாரத்தில் இடும்பன் கோயிலில் விசேஷ அபிஷேகம் மற்றும் ஆராதனையுடன் தொடங்குகிறது.
தொடர்ந்து 11 ஆம் தேதி அதிகாலை 5 மணிக்கு மேல் சென்னிமலை மாரியம்மன் கோயிலில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீர்த்தக் காவடி மற்றும் தீர்த்தக் குடங்களுடன் மலையை சுற்றி கிரிவலம் வருகின்றனர். அன்று காலை 7 மணிக்கு மேல் சென்னிமலை மலைக்கோயிலில் கணபதி ஹோமம், திரவியாகுதி, பூர்ணஹுதி நடைபெறுகிறது. மாலை 6 மணிக்கு விநாயகர் வழிபாடு, கலச ஸ்தாபனம், தேவார திருமுறை நடைபெறும். 
முக்கிய நிகழ்வாக 12 ஆம் தேதி காலை 7 மணிக்கு சுப்பிரமணிய சுவாமி மூலவர் மற்றும் உற்சவருக்கு, சப்த நதி தீர்த்த அபிஷேகம் மற்றும் முக்கடல் தீர்த்த அபிஷேகம் நடக்கிறது. 
இதற்காக பக்தர்கள் கங்கை, யமுனா, சரஸ்வதி, சிந்து, கிருஷ்ணா, கோதாவரி, தாமிரபரணி நதிகளுக்குச் சென்று தீர்த்தம் எடுத்து வருகின்றனர். அன்று காலை 7:30 மணிக்கு மேல் மூன்றாம் கால யாகபூஜை, வேதிகார்ச்சனை, மகாலட்சுமி, மகா ஜெய சுப்ரமண்ய மஹா யாக ஹோமம் நடக்கிறது.
காலை 10:30 மணிக்கு மகா அபிஷேகம், கலசாபிஷேகத்தை தொடர்ந்து மகா தீபாராதனை, உற்சவ மூர்த்திகள் புறப்பாடு நடக்கிறது. 
விழா ஏற்பாடுகளை, சுப்புசாமி தலைமையிலான அக்னி நட்சத்திர அன்னதான வழிபாட்டு மன்ற நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com