ஈரோடு-கரூர் சாலையில் சின்னியம்பாளையத்தில் புதிதாக தொடங்கப்பட் ஆர்.டி. நேஷனல் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் சேர்க்கை தொடங்கப்பட்டுள்ளது.
இந்தக் கல்லூரியில் இளங்கலை பாடப் பிரிவில் வணிகவியல், வணிகவியல் (கணினி பயன்பாடு) வணிக மேலாண்மை, ஆங்கில இலக்கியம், இளம் அறிவியல் பாடப் பிரிவில் கணினி அறிவியல் ஆகிய பாடப் பிரிவுகள் உள்ளன.
இக்கல்லூரி உலகத் தரம் வாய்ந்த கட்டட வடிவமைப்பு, குளிரூட்டப்பட்ட வகுப்பறை, ஆராய்ச்சி மற்றும் ஆய்வகக் கூடம், சிறந்த அனுபவமிக்க பேராசிரியர்கள், மாணவ, மாணவியர்களின் சிறப்பு திறன்களை மேம்படுத்தல், போக்குவரத்து வசதி, உகந்த வங்கி சூழல், வேலைவாய்ப்புக்கான உத்தரவாதம், இருபாலருக்கும் தனித்தனி விடுதி வசதி செய்யப்பட்டுள்ளது என கல்லூரி தலைவர் செந்தில்குமார் தெரிவித்தார்.