சத்தியமங்கலம் அருகே அரசுப் பேருந்து மோதியதில் பெண் திங்கள்கிழமை உயிரிழந்தார்.
சத்தியமங்கலம், உதயமரத்திட்டு மேடு பகுதியைச் சேர்ந்தவர் செல்லம் (53). இவர், அதே பகுதியில் சாலையில் திங்கள்கிழமை நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது சாலையை கடக்க முயன்றபோது அந்த வழியாக வந்த அரசுப் பேருந்து, செல்லம் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த செல்லத்தை மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் உயிரிழந்தார்.
இதுகுறித்து சத்தியமங்கலம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.