மழை பெய்ய வேண்டி, பவானி சங்கமேஸ்வரர் கோயிலில் வருண ஜெபம் மற்றும் ருத்ர ஹோம வழிபாடு திங்கள்கிழமை நடைபெற்றது.
சங்கமேஸ்வரர் கோயிலில் உள்ள நந்தி சிலை தண்ணீரில் மூழ்கும் வகையில் தொட்டி கட்டப்பட்டு, அதில் தண்ணீர் நிரப்பப்பட்டது.
தொடர்ந்து, நந்திக்கு பூக்களால் அபிஷேகம் செய்யப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டது. சங்கமேஸ்வரருக்கு மழை வேண்டி வருண ஜெபமும், ருத்ர யாகமும் நடத்தப்பட்டது.
இதையடுத்து, ஆதிகேசவப் பெருமாளுக்கு திருமஞ்சன வழிபாடும் நடத்தப்பட்டது. இந்த வழிபாட்டில், பக்தர்கள், கோயில் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.