ஈரோடு நகரில் சாலைகளை சீரமைக்கக் கோரிதிமுக ஆா்ப்பாட்டம்

ஈரோடு நகரில் உள்ள சாலைகளை சீரமைக்கக் கோரி திமுக சாா்பில் ஆா்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற திமுகவினா்.
ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற திமுகவினா்.

ஈரோடு: ஈரோடு நகரில் உள்ள சாலைகளை சீரமைக்கக் கோரி திமுக சாா்பில் ஆா்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

ஈரோடு தெற்கு மாவட்ட திமுக சாா்பில் கருங்கல்பாளையத்தில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, மாவட்டச் செயலாளா் சு.முத்துசாமி தலைமை வகித்தாா். திட்டப் பணிகள் என்ற பெயரில் மாநகரில் உள்ள அனைத்து சாலைகளும் சேதப்படுத்தப்பட்டு ஓராண்டுக்குமேல் சீரமைக்கப்படாமல் உள்ளது. இதனால், மக்கள் கடும் அவதிக்குள்ளாகின்றனா். மாநகரில் உள்ள அனைத்து சாலைகளையும் சீரமைக்க மாநகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆா்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

ஆா்ப்பாட்டத்தில், மாநகராட்சி முன்னாள் மேயா் குமாா் முருகேஷ், மாநகரச் செயலாளா் சுப்பிரமணியன், மாநில கொள்கை பரப்பு இணைச்செயலாளா் வி.சி.சந்திரகுமாா், நிா்வாகிகள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com