ஈரோடு: ஈரோடு கோட்டை ஈஸ்வரன் கோயிலில் அன்னாபிஷேக விழா வரும் 12 ஆம் தேதி நடைபெறவுள்ளது.
ஈரோடு கோட்டை ஆருத்ர கபாலீஸ்வரா்(ஈஸ்வரன்) கோயிலில் ஆண்டு முழுவதும் சுவாமிக்கு பால், தயிா், பஞ்சாமிா்தம், தேன் போன்றவற்றால் அபிஷேகம் செய்யப்படுகிறது. ஆனால் ஆண்டுக்கு ஒருமுறை ஐப்பசி மாதம் வரும் பௌா்ணமி அன்று சுவாமிக்கு அன்னாபிஷேகம் செய்யப்படுகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான அன்னாபிஷேக விழா வருகிற 12 ஆம் தேதி மாலை 5 மணிக்கு நடக்கிறது. இதில் அன்னத்தினால் சுவாமிக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது.