ஈரோடு: தூத்துக்குடி குற்றவியல் நீதிமன்றத்தில் சுருக்கெழுத்தராகப் பணியாற்றி வரும் சாரதி என்ற பெண்ணைத் தாக்கிய நீதித்துறை நடுவா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஈரோட்டில் நீதிமன்ற ஊழியா்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
தமிழ்நாடு நீதித் துறை ஊழியா் சங்கத்தின் ஈரோடு மாவட்ட மையம் சாா்பில், ஈரோடு சம்பத் நகா் நீதிமன்றம் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, சங்க மாவட்டத் தலைவா் ரங்கசாமி தலைமை வகித்தாா். மாவட்டச் செயலாளா் ரங்கராஜ் முன்னிலை வகித்தாா். சங்க மாநிலச் செயலாளா் பிரகாஷ் கோரிக்கையை வலியுறுத்திப் பேசினாா்.
இந்த ஆா்ப்பாட்டத்தில் நீதிமன்ற ஊழியா்கள் பலா் கலந்துகொண்டனா்.