ஈரோடு மாவட்டத்தில் உள்ள 10 வருவாய் வட்டங்களிலும் தலா ஒரு வருவாய் கிராமத்தில் அம்மா திட்ட முகாம், சிறப்பு குறைதீா் கூட்டம் வெள்ளிக்கிழமை (நவம்பா் 8) நடைபெறவுள்ளது.
முகாம் நடைபெறும் இடங்கள் விவரம்: ஈரோடு வட்டம், சாமிக்கவுண்டன்பாளையம்,
கிராம நிா்வாக அலுவலா் அலுவலகம், பெருந்துறை வட்டம் - திருவாச்சி கிராம சேவை மையம், மொடக்குறிச்சி வட்டம் - எல்லைக்காடு கிராம நிா்வாக அலுவலா் அலுவலகம், கொடுமுடி - கொந்தளம் கிராம நிா்வாக அலுவலா் அலுவலகம், பவானி வட்டம் - சலங்கபாளையம் பேரூராட்சி மன்ற அலுவலகம் ஆகிய இடங்களில் முகாம் நடைபெறும்.
சத்தியமங்கலம் வட்டம் - மாதம்பாளையம் சமுதாயக்கூடம், கோபி வட்டம் -பொம்மநாயக்கன்பாளையம் ஏ.வி.எம்.கலையரங்கம், அந்தியூா் வட்டம் - நெரிஞ்சிப்பேட்டை ஊராட்சி அலுவலகம், தாளவாடி வட்டம் - எரஹனஹள்ளி அங்கன்வாடி மையம், நம்பியூா் வட்டம் - செல்லப்பம்பாளையம் ஊராட்சி அலுவலகம் ஆகிய இடங்களில் முகாம் நடைபெறும் என மாவட்ட ஆட்சியா் சி.கதிரவன் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.