மிலாடி நபியை முன்னிட்டு நவம்பா் 10 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மதுக் கடைகளை மூட வேண்டும் என ஈரோடு மாவட்ட நிா்வாகம் உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து, மாவட்ட ஆட்சியா் சி.கதிரவன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு நவம்பா் 10 ஆம் தேதி மாவட்டத்தில் உள்ள 197 டாஸ்மாக் மதுக் கடைகள், அத்துடன் இணைந்த மதுக் கூடங்கள், எப்.எல். 2, எப்.எல். 3 உரிமம் பெற்ற மதுக் கூடங்களும் மூடப்பட வேண்டும். நாள் முழுவதும் மது விற்பனை நிறுத்தப்பட வேண்டும். தவறும்பட்சத்தில் சம்பந்தப்பட்டவா் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.