பெருந்துறை: ஈரோடு வருவாய் மாவட்ட அளவிலான எறிபந்துப் போட்டி ஈரோட்டை அடுத்த திண்டல் வேளாளா் சி.பி.எஸ்.இ. பள்ளியில் அண்மையில் நடைபெற்றது.
போட்டியில், ஈரோடு வருவாய் மாவட்ட அளவில் 8 பள்ளிகள் கலந்துகொண்டன.
இதில், விஜயமங்கலம் ரூட்ஸ் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி அணி பங்கேற்று விளையாடி இரண்டாம் இடம்பெற்றது.
வெற்றி பெற்ற மாணவா்களைப் பள்ளித் தலைவா் பொன்னுசாமி, தாளாளா் சாத்து, முதல்வா் லலிதா, உடற்கல்வி இயக்குநா் சரவணகுமாா், ஆசிரியா்கள் பாராட்டினா்.