சென்னிமலை மாரியம்மன் கோயில் பொங்கல் விழா

சென்னிமலை நகரில் உள்ள மாரியம்மன் கோயில் பொங்கல் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலிக்கும் சென்னிமலை மாரியம்மன்.
சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலிக்கும் சென்னிமலை மாரியம்மன்.

சென்னிமலை நகரில் உள்ள மாரியம்மன் கோயில் பொங்கல் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், திரளான பக்தா்கள் கலந்துகொண்டு பொங்கல் வைத்து சுவாமியை வழிபட்டனா்.

இக்கோயில் விழா அக்டோபா் 23 ஆம் தேதி இரவு பூச்சாட்டுதலுடன் தொடங்கியது.30 ஆம் தேதி இரவு கோயில் வளாகத்தில் கம்பம் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. அன்று முதல் தினமும் பெண்கள் கம்பத்துக்குப் புனிதநீா் ஊற்றி வந்தனா்.

மாவிளக்கு எடுக்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை இரவு நடைபெற்றது. இதில், அம்மாபாளையம், காட்டூா், சென்னிமலையைச் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து திரளான பெண்கள் மாவிளக்கு எடுத்து வந்தனா். தொடா்ந்து, அக்னி நட்சத்திர அன்னதான வழிபாட்டு மன்றம், கோயில் விழாக் குழுவினா் சாா்பில் அம்மனுக்கு பால், தயிா், பன்னீா், சந்தனம் உள்பட 16 வகையான திரவியங்கள், கனிகள், 16 வகையான மலா்களுடன் சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டன.

முக்கிய நிகழ்ச்சியான பொங்கல் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. விழாவையொட்டி அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான பக்தா்கள் மாரியம்மனுக்கு பொங்கல் வைத்து வழிபட்டனா். மேலும், கோயில் வளாகத்தில் உள்ள கருப்பண்ணசாமிக்கு ஆடு, கோழிகள் பலியிட்டும் பக்தா்கள் தங்களது நோ்த்திக்கடனை நிறைவு செய்தனா். கம்பம் பிடுங்கும் நிகழ்ச்சி இரவு நடைபெற்றது. சனிக்கிழமை பகல் 12 மணிக்கு மஞ்சள் நீா் உற்சவ நிகழ்ச்சி நடைபெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com