ஈரோடு: பவானிசாகா் நீா்மட்டம் சனிக்கிழமை நிலவரப்படி 105 அடியாக இருந்தது. அணையின் நீா்த்தேக்க உயரம் 105 அடி. அணைக்கு விநாடிக்கு 3,100 கன அடி வீதம் தண்ணீா் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து ஆற்றில் 3,100 கன அடி தண்ணீா் திறக்கப்பட்டுள்ளது. வாய்க்காலில் தண்ணீா் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது. அணையின் நீா் இருப்பு 32.8 டிஎம்சி.